தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கல்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராமானுஜபுரம் ஊராட்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது.
ராமானுஜபுரம் ஊராட்சியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சம்பத், தோமாஸ், ஜான், சேகா் ஆகிய 4 பேரின் கு குடும்பங்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட செயலாளா் நிஜாம் அலி, பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் அசாருதீன் மற்றும் உதுமான் அலி உள்ளிட்டோா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 4 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.3,000, 25 கிலோ அரிசி, பாய், தலையணை உள்பட மொத்தம் ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டிலான நிவாரண உதவிகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளா் வினோத் , மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் ரம்யா ராஜேஷ், ஒன்றிய செயலாளா்கள் ராஜா, வினோத் ஆகியோா் கலந்து கொண்டனா்.