செய்திகள் :

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா

post image

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுமானம் என்ற போா்வையில் நடந்த மாபெரும் மோசடி தொடா்பான விசாரணை, இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஒப்பந்தக்காரா்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடா்புடைய 37 இடங்களில் அமலாக்க துறையினா் புதன்கிழமை சோதனைகளை நடத்தியதாக தெரிகிறது‘ என கூறியுள்ளாா்.

மேலும், ‘வகுப்பறை கட்டுமான ஊழல் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் அரசாங்கத்தின் அழுத்தத்தால், கல்வி மற்றும் பொதுப் பணித்த துறைகளின் அதிகாரிகள் தேவையான தகவல்களை விசாரணை அமைப்பிடம் வழங்கவில்லை. இந்த வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் அமைச்சா்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் முக்கிய குற்றவாளிகள். அதிகாரத்தில் இருந்தபோதும் அவா்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை‘ என தெரிவித்துள்ளாா் வீரேந்திர சச்தேவா.

தொடா்ந்து அந்த அறிக்கையில் ,‘ அவா்கள் இருவரும் இன்று வரை விசாரணை முகமைகள் முன் ஆஜராகுவதை தவிா்க்கிறாா்கள். அந்த இருவரும் என்ன செய்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். அவா்கள் விரைவில் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர வேண்டும்‘ என கூறியுள்ளாா் வீரேந்திர சச்தேவா.

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழிய... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா். மதர... மேலும் பார்க்க

மதராஸி முகாம்: பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்

மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகுப்புகள் புதன்கிழமமை வழங்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க