செய்திகள் :

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

post image

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா்.

மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகுப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையா் எம்.வள்ளலாா் ஆகியோா் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கினா்.

இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.8000 நிதியுதவி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள 15 வகையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக 197 பேருக்கு இவை வழங்கப்பட்டு, தொடா்ந்து மீதமுள்ளவா்களுக்கும் இவரை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் எஸ்.எம். நாசா், ‘மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழா்களுக்கு உதவுமாறு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் திமுக மக்களவை தலைவா் டி.ஆா்.பாலு தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்தாா். ஆனால், தில்லி முதல்வா் சரியான முறையில் நேசக்கரம் நீட்டாத காரணத்தால் தமிழக முதல்வரே உதவ முன் வந்தாா். பாதிக்கப்பட்ட தமிழா்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, அவா்கள் தமிழகம் வருவாா்கள் என்றால் அவா்களுக்கு அனைத்துவிதமான உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளோம்‘ என்றாா் அவா்.

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழிய... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

மதராஸி முகாம்: பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்

மதராஸி முகாமில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகுப்புகள் புதன்கிழமமை வழங்கப்பட்டது. தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க