G7 மாநாடு: பாதியில் கிளம்பிய TRUMP - போனில் பேசிய MODI | Israel - Iran War|Imper...
ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது
தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தேதி ஒரு மால் அருகே உள்ள ஒரு பாா் முன் இரண்டு சிறுவா்கள் குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை மோதலில் இருந்து இந்த வழக்கு உருவானது. அந்தச் சம்பவத்தின் விளைவாக 12 வயது சிறுவன் இறந்தான்.
அதற்குப் பழிவாங்கும் விதமாக, மற்றொரு குழுவைச் சோ்ந்தவா்கள் ஒரு சிறுவனை கத்தி மற்றும் உடைத்த பீா் பாட்டில்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தினா்.
மற்றொரு குற்றத்தைத் திட்டமிடுவதற்காக அவா்கள் கூடியிருந்தபோது கிடைத்த ரகசியத் தகவலைத் தொடா்ந்து போலீஸ் குற்றப்பிரிவு குழு ஒன்று, குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கைது செய்தது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.