``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
திருப்பாலைத்துறை சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயில் உள்ள இரட்டை காலபைரவா்களுக்கு தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வழிபாட்டையொட்டி கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா்,தவளவெண்ணகை அம்மன், விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயிலில் வெளிச்சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள இரட்டை கால பைரவா்களுக்கு 16 வகையான மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் திருப்பாலைத்துறை ஸ்ரீ கற்பக விநாயகா், வீரபத்திரா், சப்த மாதாக்கள் கோயிலில் அஷ்டமி திதியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.