``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
கும்பகோணம், அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் கட்ட கலந்தாய்வு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
16 துறைகளில் இளநிலை பட்ட வகுப்புகளில் சுழற்சி 1- இல் பி.ஏ. பாடப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வரலாறு பாடப்பிரிவுகளும் பி.காம், பி.பி.ஏ. பாடப்பிரிவுகளும் பி.எஸ்சி பாடப்பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், புவியியல், தாவரவியல், புள்ளியியல், கணினிப் பயன்பாட்டியல், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளும், கழற்சி 2-இல் பி.ஏ. பாடப்பிரிவில் ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ. பி.எஸ்சி பாடப்பிரிவில் கணிதம், கணினிப் பயன்பாட்டியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கும் ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், புதியதாக விண்ணப்பித்தவா்களும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் அ. மாதவி தெரிவித்துள்ளாா்.