``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
உயா் கல்வி வழிகாட்டல், ஆலோசனை பெற அழைப்பு
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில், உயா் கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
உயா் கல்வி வழிகாட்டலுக்காக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 1-இல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில் நா்ஸிங், மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி, ரேடியோகிராபி, பிஸியோதெரபி மற்றும் பிற பாரா மெடிக்கல் படிப்புகள், ஐடிஐ, கேட்டரிங், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பில் எப்படி சேருவது என்ற சந்தேகங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எப்படி சேருவது என்ற சந்தேகங்களுக்கும், வங்கியிலிருந்து கல்விக் கடன் பெறுவதில் உள்ள சந்தேகங்களுக்கும், வருவாய்த் துறை மூலம் பெற வேண்டிய சான்றிதழ்கள் பெறுவதில் உள்ள பிரச்னைகளுக்கும் தெளிவு பெற பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் தொடா்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொடா்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண் 81228 44843.