கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு பெற விரும்பும் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் பாபநாசம் உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலரை அணுகலாம்.
தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி வரும் உழவா் சந்தையில் விவசாயிகள் காய்கறிகள், கீரைவகைகள், பழங்கள், தேங்காய், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், இயற்கை பாரம்பரிய அரிசி ரகங்கள், கரும்புச்சாறு, பாரம்பரிய உணவு மற்றும் சிற்றுண்டி மையங்கள் செயல்படுத்தவும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பாபநாசம் உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலரிடம் கடைகள் தேவைப்படுவோா் நேரில் சென்று பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.