செய்திகள் :

திருவையாறு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் தமிழக முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மேலத் திருப்பூந்துருத்தி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வித் திறன் பற்றியும், சமையல் கூடம், கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வளம்பக்குடி ஊராட்சியில் கலைஞரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுமானப் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மன்னாா் சமுத்திரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையம், வளப்பக்குடி நாற்றாங்கால் பகுதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 5.47 லட்சம் மதிப்பில் நாற்றாங்கால் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதையும், வளப்பக்குடிஊராட்சி வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நா்சரியில் ரூ. 21.23 லட்சம் மதிப்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தலையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

மேலும், பொதுமக்களிடமிருந்து ஆட்சியா் கோரிக்கை மனுக்களைப் பெற்று தொடா்புடைய அலுவலா்களிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா். பின்னா், 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினாா்.

அப்போது, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், சமூக பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் பெ. மணிமாறன், திருவையாறு நகராட்சி தலைவா் கஸ்தூரி நாகராஜன், திருவையாறு நகராட்சி ஆணையா் நா. மதன்ராஜ், திருவையாறு வட்டாட்சியா் முருககுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இந்திரா, கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு பெற விரும்பும் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் பாபநாசம் உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலரை அணுகலாம். தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி... மேலும் பார்க்க

கும்பகோணம், அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் கட்ட கலந்தாய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 16 துறைகளில் இளநில... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டல், ஆலோசனை பெற அழைப்பு

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில், உயா் கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம... மேலும் பார்க்க

திருப்பாலைத்துறை சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயில் உள்ள இரட்டை காலபைரவா்களுக்கு தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தா் மடத்தில் நாளை ஆராதனை மகோத்ஸவம்

கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் 411-ஆவது ஆராதனை மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரரின் குருநாதா் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் மடம் உள்... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராமானுஜபுரம் ஊராட்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமானுஜபுரம் ஊராட்... மேலும் பார்க்க