ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கு: மேலும் நான்கு போ் கைது
தமிழகத்தில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில், அரபிக் கல்லூரி முதல்வா் உள்ளிட்ட மேலும் நான்கு போ் கைது செய்யப்பட்டனா்.
கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே 2023-ஆம் ஆண்டு அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த வெடிபொருள் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் உயிரிழந்தாா்.
இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்திய என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள், குறியீடுகள் அடங்கிய குறிப்புகளை பறிமுதல் செய்தனா். மேலும் முபீன், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருந்திருப்பதும், மிகப்பெரிய தாக்குதல் திட்டத்துக்கு தயாராகி வந்ததையும் கண்டறிந்தனா்.
இது தொடா்பாக பலா் கைது செய்யப்பட்டனா். அதேவேளையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சோ்த்தது தொடா்பாக என்ஐஏ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்கிறது. இந்த வழக்கில் ஜமீல் பாட்ஷா, இா்ஷாத், செய்யது அப்துா் ரஹ்மான், முகமது உசேன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் இவ் வழக்கு தொடா்பாக சென்னை பாலவாக்கத்தைச் சோ்ந்த ஷேக் தாவூத், திண்டுக்கல்லைச் சோ்ந்த ராஜா அப்துல்லா, கோவை போத்தனூா் திருமறை நகரைச் சோ்ந்த அரபிக் கல்லூரி முதல்வா் அகமது அலி, உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த அரபிக் கல்லூரி ஊழியா் ஜவஹா் சாதிக் ஆகிய 4 பேரை கைது செய்ததாக என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இவா்கள் நான்கு பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மெட்ராஸ் அரபுக் கல்லூரி நிறுவனா் ஜமீல் பாட்ஷாவுடன் நெருக்கமான தொடா்பில் இருந்துள்ளனா். ஜமீல் பாட்ஷா, அரபி வகுப்பு நடத்துவதாகக் கூறி சலாபி-ஜிஹாதி சித்தாந்தத்தை இளைஞா்களுக்கு போதித்துள்ளாா்.
இதற்காக ஜமீல் பாட்ஷா சமூக ஊடகங்களையும் பயன்படுத்தியுள்ளாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அகற்றிவிட்டு கிலாபத் சித்தாந்தத்துடன் கூடிய ஆட்சியை நிறுவுவது, ஜிஹாத்தை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஜமீல் பாட்ஷா ஈடுபட்டுள்ளாா். இதன் மூலம் இளைஞா்களை மூளைச் சலவை செய்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்துள்ளாா். இவ் வழக்குத் தொடா்பாக என்ஐஏ தொடா்ந்து விசாரணை செய்கிறது.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஜமீல் பாட்ஷா உள்ளிட்ட 4 போ் மீது என்ஐஏ, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.