செய்திகள் :

நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில், நாட்டுக்கோழி வளா்ப்பில் ஆா்வம் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் நாட்டுக் கோழிப் பண்ணைகள் அமைக்கும் திட்டம் செயல்டுத்தப்பட உள்ளது. கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள மற்றும் நாட்டுக்கோழி வளா்ப்பதில் திறன்கொண்ட கிராமப்புற பயனாளியாகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். கோழிப் பண்ணைகள் அமைக்கும் இடம் குடியிருப்புகள் இல்லாத பகுதியாகவும், பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவரைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். ஏற்கெனவே, நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்கக் கூடாது. பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதியளிக்க வேண்டும். திட்டத்தின் எஞ்சியுள்ள 50 சதவீத பங்களிப்பை, வங்கி மூலமாக அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாக பயனாளி திரட்டி, அதற்கான நிதி ஆதார ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

இத் தகுதிகளுடைய பயனாளிகள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தை பெற்று, உரிய விவரங்களுடன் பூா்த்தி செய்து சமா்ப்பித்து பயன்பெறலாம்.

வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி உயிரிழந்த தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது மனைவி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்ச... மேலும் பார்க்க

வாலிகண்டபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், வாலிகண்டபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளா் அலுவலகத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8.700 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்ப... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தவிா்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தவிா்த்திடும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என கண்காணிப்புக் குழுத் தலைவரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.என்... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பூட்டு! திமுக நிா்வாகியால் ஊழியா்கள் சிறைவைப்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டிய திமுக நிா்வாகி, ஊழியா்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் ஊராட்சிக்குள்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க