11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிற...
சாலை விபத்துகளை தவிா்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்
தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தவிா்த்திடும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என கண்காணிப்புக் குழுத் தலைவரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.என். அருண்நேரு அறிவுறுத்தியுள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், சாலைப் பாதுகாப்பு குறித்த கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் இடா்பாடுகள், தேவைகள் இருந்தால் என்னுடைய கவனத்துக்கு கொண்டுவரும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீா்வு காண முடியும். ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஒதுக்கப்படும் பணிகளை, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் முடித்து பொதுமக்கள் பயனடையும் வகையில் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை அளித்தால், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து அத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, பல்வேறு அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா் அருண்நேரு.
இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்