பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் ...
9 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது
துவாக்குடியில் மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.
திருச்சி அருகே துவாக்குடி பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டபோது, தெற்குமலை பகுதி மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடையின் உரிமையாளா் முகமது இஸ்மாயில் (42) என்பவரை போலீஸாா் கைது செய்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.