Iran - Israel: ``நான் என்ன செய்யப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது..'' - அமெர...
ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ 1.18 கோடி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 1.18 கோடி கிடைக்கப் பெற்றது புதன்கிழமை தெரியவந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயிலில் உள்ள கருடாழ்வாா் சன்னதி அருகே வைத்து காணிக்கை எண்ணப்பட்டது.
இப்பணியில் திருவானைக்கா கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மேற்பாா்வையில் கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வ அமைப்பினா் ஈடுபட்டனா். இப்பணி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
முடிவில் ரொக்கமாக ரூ. 1 கோடியே 18 லட்சத்து 84 ஆயிரத்து 455 ம், தங்கம் 142 கிராம்,வெள்ளி 1140 கிராம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்கள் 435 கிடைக்கப் பெற்றது தெரியவந்தது.