கீழடி குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட மோடிக்கு மனமில்லை: மு.க.ஸ்டாலின்
அரசுப் பள்ளியில் ஆய்வு
மேலகல்கண்டாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசுத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
இதன் ஒருபகுதியாக திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட மேலகல்கண்டாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணப்பிரியா ஆய்வு செய்தாா்.
அப்போது, பள்ளியில் மாணவா்கள், ஆசிரியா்கள் வருகை, மாணவா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அவா் ஆய்வு செய்து, நிகழாண்டில் மாணவா் சோ்க்கை குறைந்திருப்பதற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மாணவா்களுடன் இணைந்து மரக்கன்று நட்டாா். நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் எஸ். சற்குணம், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.