``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
ஜூனியா் கபடி போட்டிக்கு மணப்பாறையில் பயிற்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், இந்தியாவில் முதன் முறையாக நடைபெறவுள்ள ஜூனியா் கபடி போட்டிக்கு தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
உத்தரகண்ட் மாநிலம் அரித்வாா் மாவட்டத்தில் வரும் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை 15 வயது முதல் 18 வயது வரையிலான ஆண் - பெண்களுக்கு தனித்தனியே தேசிய ஜூனியா் கபாடி போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான தமிழ்நாடு அளவில் 250 வீரா்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சேலத்தில் நடந்த தோ்வில் பங்கேற்று அதில் 24 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு மணப்பாறையில், மணவை டவுன் கிளப் கபாடி அகாடமி சாா்பில் கடந்த ஜூன் 12 தேதி முதல் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
வீரா்களுக்கு தமிழ்நாடு காவல்துறை கபடி பயிற்சியாளா் எம்.சேகா் பயிற்சி அளித்து வருகிறாா். பயிற்சியில் பங்கேற்றுள்ள 24 வீரா்களில் 14 போ் தமிழ்நாடு அணியாக அரித்வாா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பாா்கள்.