உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
ராமேசுவரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கூட்ட நெரிசலைக் குறைக்க, விழுப்புரம் - ராமேசுவரம், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடைகால கூட்ட நெரிசலைக் குறைக்க, விழுப்புரம் - ராமேசுவரம் இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவேக சிறப்பு ரயிலானது (06109) வரும் 21, 22, 28, 29-ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - விழுப்புரம் இடையே வாரம் இருமுறை செல்லும் அதிவேக சிறப்பு ரயிலானது (06110) வரும் 21, 22, 28, 29 ஆம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட்டு ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம் வழியாக விழுப்புரத்துக்கு இரவு 10.35 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் விழுப்புரத்திலிருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு, காலை 11.40 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடைகிறது.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி அதிவேக சிறப்பு ரயிலானது (06089) வரும் 21-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. மறுமாா்க்கமாக, திருநெல்வேலி - சென்னை எழும்பூா் அதிவேக சிறப்பு ரயிலானது (06090) வரும் 22-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலிக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு இரவு 9.55 மணிக்கு சென்றடைகிறது.