பைக் மீது கனரக வாகனம் மோதல்: விவசாயி உயிரிழப்பு
செங்கம் அருகே மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி கனரக வாகனம் மோதி உயிரிழந்தாா்.
செங்கத்தை அடுத்த சந்தகவுண்டன்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை (55). இவா், தனது மனைவி காசியம்மாளுடன் செவ்வாய்க்கிழமை செங்கத்துக்கு வந்து தனது நிலத்தில் விளைந்த மணிலாவை செக்கில் இட்டு அரைத்து அதன் மூலம் கிடைத்த எண்ணெய்யை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.
துக்காப்பேட்டை பகுதியில் சென்றபோது, போளூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கனரக வாகனம் ஏழுமலை ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறு இருவரும் கீழே விழுந்தனா்.
அப்போது, ஏழுமலை கனரக வாகன சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காசியம்மாள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று ஏழுமலை சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.