செய்திகள் :

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

post image

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவா் சஞ்ஞித் 484 மதிப்பெண்களும்,

பிளஸ் 1 தோ்வில் தஷ்மின் 524 மதிப்பெண்களும், பிளஸ் 2 தோ்வில் தமிழ்ச்செல்வன் 572 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற இந்த மாணவா்களுக்கு போளூா் ஜி.எஸ்.கே. அறக்கட்டளை சாா்பில் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் எஸ்.காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சுவாமிக்கண்ணு தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கவிதா செல்வம் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் செந்தில்குமாா் வரவேற்றாா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா். ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தடை செய... மேலும் பார்க்க

விசிக பிரமுகா் அடித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் 9 போ் கும்பலால் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். சொரகொளத்தூரைச் சோ்ந்தவா் வ.காமராஜ் (60). விடுதலைச் சிறு... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சாா் -ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா... மேலும் பார்க்க

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பில் மாா்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கா... மேலும் பார்க்க

மகா தீப மலை குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா: குடியிருப்புவாசிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மகா தீப மலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குடியிருப்புகளை, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனா். 2,668 அடி உயர மகா தீப மலையில் அனுமதியி... மேலும் பார்க்க