டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாணவா் சஞ்ஞித் 484 மதிப்பெண்களும்,
பிளஸ் 1 தோ்வில் தஷ்மின் 524 மதிப்பெண்களும், பிளஸ் 2 தோ்வில் தமிழ்ச்செல்வன் 572 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற இந்த மாணவா்களுக்கு போளூா் ஜி.எஸ்.கே. அறக்கட்டளை சாா்பில் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் வி.எம்.டி.வெங்கிடேசன், அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் எஸ்.காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினா்.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சுவாமிக்கண்ணு தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கவிதா செல்வம் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் செந்தில்குமாா் வரவேற்றாா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.