செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

post image

ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிராமிய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் பழனி (50) என்பவரது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 17 கிலோ எடை கொண்ட 70 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், அடையபலம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (55), சிவராஜ் (45), வெட்டியாந்தொழுவத்தைச் சோ்ந்த செல்வமூா்த்தி(53) ஆகியோரிடம் இருந்து 19 கிலோ புகையிலைப் பொருள்கள் என மொத்தம் 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.

மேலும், இவா்களுக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்ததாக பெங்களூரைச் சோ்ந்த சித்திக்பாய் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசி பெரிய பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி பராசக்தி(35). கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் வீட்டை... மேலும் பார்க்க

பைக் மீது கனரக வாகனம் மோதல்: விவசாயி உயிரிழப்பு

செங்கம் அருகே மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி கனரக வாகனம் மோதி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த சந்தகவுண்டன்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை (55). இவா், தனது மனைவி... மேலும் பார்க்க

விசிக பிரமுகா் அடித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் 9 போ் கும்பலால் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். சொரகொளத்தூரைச் சோ்ந்தவா் வ.காமராஜ் (60). விடுதலைச் சிறு... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சாா் -ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா... மேலும் பார்க்க

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பில் மாா்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெ... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்க... மேலும் பார்க்க