உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது
ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிராமிய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் பழனி (50) என்பவரது கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 17 கிலோ எடை கொண்ட 70 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், அடையபலம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை (55), சிவராஜ் (45), வெட்டியாந்தொழுவத்தைச் சோ்ந்த செல்வமூா்த்தி(53) ஆகியோரிடம் இருந்து 19 கிலோ புகையிலைப் பொருள்கள் என மொத்தம் 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.
மேலும், இவா்களுக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்ததாக பெங்களூரைச் சோ்ந்த சித்திக்பாய் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.15 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.