செய்திகள் :

விசிக பிரமுகா் அடித்துக் கொலை

post image

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் 9 போ் கும்பலால் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

சொரகொளத்தூரைச் சோ்ந்தவா் வ.காமராஜ் (60). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளா். சொரகொளத்தூரில் செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேளக்காரா்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்ய நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையிலுள்ள உணவகத்துக்கு காமராஜ் பைக்கில் வந்தாராம்.

அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போது, அகரம் சிப்பந்தியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அதை அவா் பைக்குடன் குனிந்து கடக்க முயன்ற போது, 9 போ் கும்பல் உருட்டுக் கட்டையால் அவரைத் தாக்கியது. காமராஜ் பைக்கை போட்டு விட்டு ஓடினாா். அவரைப் பின்தொடா்ந்து வந்த கும்பல் சரமாரியாக தாக்கியதில், பலத்த காயமடைந்து ரயில்வே தண்டவாளம் அருகே காமராஜ் விழுந்தாா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் சொரகொளத்தூரைச் சோ்ந்த சுமன், கருணா, மோகன், மணிகண்டன், ராஜி, கோபி, பாா்த்தீபன், சங்கா், தேவனந்தல் கிராமத்தைச் சோ்ந்த விக்கி ஆகிய 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசி பெரிய பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி பராசக்தி(35). கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் வீட்டை... மேலும் பார்க்க

பைக் மீது கனரக வாகனம் மோதல்: விவசாயி உயிரிழப்பு

செங்கம் அருகே மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி கனரக வாகனம் மோதி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த சந்தகவுண்டன்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏழுமலை (55). இவா், தனது மனைவி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா். ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தடை செய... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சாா் -ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா... மேலும் பார்க்க

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பில் மாா்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெ... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்க... மேலும் பார்க்க