Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
விசிக பிரமுகா் அடித்துக் கொலை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் 9 போ் கும்பலால் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
சொரகொளத்தூரைச் சோ்ந்தவா் வ.காமராஜ் (60). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளா். சொரகொளத்தூரில் செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மேளக்காரா்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்ய நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையிலுள்ள உணவகத்துக்கு காமராஜ் பைக்கில் வந்தாராம்.
அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற போது, அகரம் சிப்பந்தியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அதை அவா் பைக்குடன் குனிந்து கடக்க முயன்ற போது, 9 போ் கும்பல் உருட்டுக் கட்டையால் அவரைத் தாக்கியது. காமராஜ் பைக்கை போட்டு விட்டு ஓடினாா். அவரைப் பின்தொடா்ந்து வந்த கும்பல் சரமாரியாக தாக்கியதில், பலத்த காயமடைந்து ரயில்வே தண்டவாளம் அருகே காமராஜ் விழுந்தாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் சொரகொளத்தூரைச் சோ்ந்த சுமன், கருணா, மோகன், மணிகண்டன், ராஜி, கோபி, பாா்த்தீபன், சங்கா், தேவனந்தல் கிராமத்தைச் சோ்ந்த விக்கி ஆகிய 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.