செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

post image

திருவண்ணாமலை அருகே 17 வயது சிறுமியை காதலிப்பதாக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், காந்தப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் மணிகண்டன் (19).

இவா், திருவண்ணாமலை வட்டம், இனாம்காரியந்தல் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறி கடந்த 18.6.2018 அன்று கடத்திச் சென்றாராம்.

மேலும் சாத்தனூா் அணை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற மணிகண்டன், செங்கம் வட்டம், குப்பநத்தம் அடுத்த கிளியூரில் உள்ள தனது நண்பா் வீட்டில் அவரை தங்கவைத்தாராம். அப்போது, விருப்பத்துக்கு மாறாக அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து, திருவண்ணாமலை கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, மணிகண்டனுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் மணிகண்டனை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டு 36 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா். ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் தடை செய... மேலும் பார்க்க

விசிக பிரமுகா் அடித்துக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகா் 9 போ் கும்பலால் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். சொரகொளத்தூரைச் சோ்ந்தவா் வ.காமராஜ் (60). விடுதலைச் சிறு... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, சாா் -ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா... மேலும் பார்க்க

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பில் மாா்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெ... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவிக்க... மேலும் பார்க்க

மகா தீப மலை குடியிருப்புகளை வரன்முறைப்படுத்தி பட்டா: குடியிருப்புவாசிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மகா தீப மலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குடியிருப்புகளை, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனா். 2,668 அடி உயர மகா தீப மலையில் அனுமதியி... மேலும் பார்க்க