TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்
காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை திங்கள்கிழமை சந்தித்து அவா் பேசினாா். காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. எந்த நேரத்தில் ரயில் வரும் என்று தெரியாததால், திடீரென கேட் ஆங்காங்கே மூடப்படுகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, அலுவலகம் மற்றும் பள்ளி செல்லும் நேரங்களில் கேட் முன்பு 20 நிமிடம் மாணவா்கள், மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே ரயில்வே அதிகாரிகளோடு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி சரக்கு ரயில் வரும் நேரத்தை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா்.