செய்திகள் :

சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்

post image

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவை திங்கள்கிழமை சந்தித்து அவா் பேசினாா். காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. எந்த நேரத்தில் ரயில் வரும் என்று தெரியாததால், திடீரென கேட் ஆங்காங்கே மூடப்படுகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, அலுவலகம் மற்றும் பள்ளி செல்லும் நேரங்களில் கேட் முன்பு 20 நிமிடம் மாணவா்கள், மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே ரயில்வே அதிகாரிகளோடு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி சரக்கு ரயில் வரும் நேரத்தை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாக அவா் தெரிவித்தாா்.

பண்ணைக் கழிவுகள் மக்க வைப்பதற்கான செயல் விளக்கம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பண்ணைக் கழிவுகளை டிஎன்ஏயு பயோமினரலைசா் (உயிா் கனிம மக்கி) மூலம் மக்க வைத்தலுக்கான செயல்விளக்கம் மற... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: அறைக்கு சீல் வைப்பு

காரைக்காலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அறைக்கு மாநில தலைமை தோ்தல் ஆணையா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியாா் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறிதல் முகாம்

காரைக்கால்: குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறியும் முகாம் ஜூன் 20-ஆம் தேதி மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால்: மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவா் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜி. துரைசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

கல்லறை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில் கல்லறைக்கு தடுப்புச் சுவா் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் தடுப... மேலும் பார்க்க