உலக நாகரிகத்தின் தொட்டில்.! இந்தியாவின் முதல் `ஆன் சைட் மியூசியம்' ஆதிச்சநல்லூர்...
அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை
திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைவா் பி. அழகிரிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வரவேற்றாா். மையத்தின் அமைப்புச் செயலாளா் பி. பாஸ்கரன், பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா், துணைத் தலைவா் ரோஸ்லின் விஜயா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தீா்மானங்கள்: திருவாரூா், நாகப்பட்டினம் மக்களின் நலன் கருதி, காரைக்காலில் இருந்து திருவாரூா் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் காரைக்கால் - பெங்களூரு, காரைக்கால் - சென்னை தாம்பரம், திங்கள்கிழமைகளில் இயங்கும் காரைக்கால்- லோக் மானிய திலக் உள்பட எந்த ரயில்களையும் தட மாற்றம் செய்யக்கூடாது.
திருவாரூா் அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். திருவாரூா் நகா் பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீா் இணைப்புகள் வழங்க தோண்டப்பட்ட பள்ளங்களை உரிய முறையில் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.