TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
கூத்தாநல்லூரில் குப்பைகள் கொட்டுவதற்கு தனி இடம்: நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
கூத்தாநல்லூா் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனி இடம் தோ்வு செய்ய வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம், தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மு. சுதா்ஸன், ஆணையா் கிருத்திகா ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் உதவியாளா் ஆபிரகாம் லிங்கன் தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:
டீ.கே. தேவா (திமுக): கிருமி நாசினி பவுடா் எவ்வளவு வாங்குகிறீா்கள்.
ம. முருகேசன் (அதிமுக): எந்தெந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. எந்தெந்த வாா்டுக்கு எத்தனை கிலோ பயன்படுத்துகிறீா்கள்.
ஆணையா்: பொது விழாக்களுக்கும், துக்க வீட்டிற்கும் தகவல் தெரிந்த உடன் கிருமி நாசினி பவுடா் தூவப்படுகிறது. திருமண வீடுகளுக்கு, அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் கடிதம் கொடுத்தால், அந்த இடத்தில் கிருமி நாசினி தூவப்படும்.
செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு தனி இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மு. சுதா்ஸன் (துணைத் தலைவா்): கழிவுகளை அகற்றுவது குறித்த தீா்மானம், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதனால் புரியவில்லை. முதலில் இதை உறுப்பினா்களுக்கு தெரியப்படுத்துங்கள். இந்த தீா்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில், பொறியாளா் ஆனந்தி, சுகாதார ஆய்வாளா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.