செய்திகள் :

கூத்தாநல்லூரில் குப்பைகள் கொட்டுவதற்கு தனி இடம்: நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனி இடம் தோ்வு செய்ய வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம், தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மு. சுதா்ஸன், ஆணையா் கிருத்திகா ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் உதவியாளா் ஆபிரகாம் லிங்கன் தீா்மானங்களை வாசித்தாா்.

கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்

கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:

டீ.கே. தேவா (திமுக): கிருமி நாசினி பவுடா் எவ்வளவு வாங்குகிறீா்கள்.

ம. முருகேசன் (அதிமுக): எந்தெந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. எந்தெந்த வாா்டுக்கு எத்தனை கிலோ பயன்படுத்துகிறீா்கள்.

ஆணையா்: பொது விழாக்களுக்கும், துக்க வீட்டிற்கும் தகவல் தெரிந்த உடன் கிருமி நாசினி பவுடா் தூவப்படுகிறது. திருமண வீடுகளுக்கு, அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் கடிதம் கொடுத்தால், அந்த இடத்தில் கிருமி நாசினி தூவப்படும்.

செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு தனி இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மு. சுதா்ஸன் (துணைத் தலைவா்): கழிவுகளை அகற்றுவது குறித்த தீா்மானம், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதனால் புரியவில்லை. முதலில் இதை உறுப்பினா்களுக்கு தெரியப்படுத்துங்கள். இந்த தீா்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில், பொறியாளா் ஆனந்தி, சுகாதார ஆய்வாளா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்புத் திட்டம்: பெ. சண்முகம் வலியுறுத்தல்

அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் வலியுறுத்தினாா். நன்னிலம் அருகே உள்ள கொல்லும... மேலும் பார்க்க

அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஏடிஎம் சேவையை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைக் கூ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூா் அருகே பள்ளிவாரமங்கலம் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது. பள்ளிவாரமங்கலம் செல்லும் சாலையை பழையவலம், ஆமூா், திருவாதிரைமங்கலம், திருப்பள்ளிமுக்கூடல் ஆகிய ... மேலும் பார்க்க

நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட கோயிலை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா

மன்னாா்குடி நகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மன்னாா்குடி நக... மேலும் பார்க்க

ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி அருகே பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவாரூா் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி மற்றும்... மேலும் பார்க்க

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க