செய்திகள் :

'அண்ணன் ஸ்டாலினின் வாரிசு குடும்ப வாரிசு இல்லை; கருத்தியல் வாரிசு' - சொல்கிறார் திருமாவளவன்

post image

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “கட்சிக்கான ஒரு பேனர் அறிவித்த உடன் முதல்வராகிவிடலாம் என்று நினைத்துவிடுகிறார்கள்.

இன்னும் சொல்லப் போனால், அவர்களை நீ தான் அடுத்த முதல்வர் என்று உசுப்பிவிடுகிறார்கள். அண்ணா ஒரு முறை, கருணாநிதி 5 முறை, ஸ்டாலின் ஒருமுறை என்று 7 முறை திமுக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது என்று சொன்னால், அது ஒன்றும் அதிர்ஷ்டத்தில் நடக்கும் விஷயமல்ல.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

`என் உயரம் எனக்கு தெரியும்’

ஏன் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் சொல்வதில்லை, ஏன் உங்களுக்கு ஆசை வரவில்லை என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். நானும் ரவுடிதான் என்று வடிவேலு வண்டியில் ஏறுவதை போல் எல்லோரும் ஏற முடியாது. என் உயரம் எனக்கு தெரியும்.

அப்படி சில பேர் நான்தான் அடுத்த முதல்வர் என்று சிலர் வண்டியில் ஏறிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால், இதனை செய்யப் போகிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் தனி நீங்கள் தனி என்று இல்லை. நாங்கள் எல்லாம் சேர்ந்தததுதான் நீங்கள். மாநில அரசுகள் எல்லாம் சேர்ந்து டெல்லியில் ஒரு ஒன்றிய அரசை உருவாக்குகிறோம். அது ஒரு அரைக்கூட்டாட்சி தத்த்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசு.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

அண்ணன் ஸ்டாலினின் வாரிசு குடும்ப வாரிசு இல்லை. கருத்தியல் வாரிசு. அதனால்தான் 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக்கொள்கை வேண்டாம் என்ற சொல்கின்ற துணிச்சல் அவருக்கு இருக்கிறது.  அவர் கலைஞரின் பிள்ளை என்பதை விட அவர் ஒரு கருத்தியல் வாரிசு” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'மக்களை உளவு பார்க்கிறதா வாட்ஸ்ஆப்?' குற்றம்சாட்டும் ஈரான் - வாட்ஸ்ஆப்பின் ரியாக்‌ஷன் என்ன?

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு அதன் குடிமக்களிடம் வாட்ஸ்ஆப்பை அவர்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து டெலீட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் அர... மேலும் பார்க்க

'ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கிறதா... இல்லையா?' - மாற்றி பேசும் ட்ரம்ப், துளசி கப்பார்டு!

'ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்கிறது' என்பது தான் இஸ்ரேல் - ஈரான் தாக்குதலின் முக்கிய பின்னணி. ஆனால், இந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக அமெரிக்க உளவுத்துறையின் இயக்குநர் துளசி கப்பார்டு கடந்த மார்ச் மாதம... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கல்வி இந்திய குருகுல முறையுடன் ஒத்துப் போக வேண்டும்’ - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

`சனாதனம் ஒற்றுமையை போதிக்கிறது..!’புதுச்சேரிக்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக வந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இறுதி நாளான நேற்று புதுச்சேரி மத்தியப் ப... மேலும் பார்க்க

'பி.டி.ஆர் கொடுத்த வாக்குமூலம்; ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்' - வலியுறுத்தும் அன்புமணி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு முதல்வரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார... மேலும் பார்க்க

``மதுரை மேற்கில் உதயசூரியன் உதிக்காது, மறையத்தான் செய்யும்" - செல்லூர் ராஜூ ஆவேசம்

தன்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட விவரங்களை திமுகவினர் சேகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தத... மேலும் பார்க்க

'யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்' - திண்டுக்கல் லியோனி

வருகிற ஜுன் 22 ஆம் தேதி மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முத... மேலும் பார்க்க