செய்திகள் :

கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?

post image

ஈரான் மதகுரு அயத்துல்லா அலி கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால் ஈரானின் புதிய தலைவராக யார் தேர்தெடுக்கப்படுவார்கள் என கருத்துகள் எழுந்திருக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒத்துழைக்காமல் சண்டையிட்டு வருகின்றன.

ஈரான் மீது கடந்த 13 ஆம் தேதி திடீரென தாக்குதல் தொடுத்த இஸ்ரேல் தனது ஆதிக்கத்தைத் தொடந்து வருகிறது. தெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள், முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்கி அழித்தது.

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் என பலர் கொல்லப்பட்டனர். எரிவாயு சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிடங்கையும் தாக்கியது. இந்த எண்ணெய் கிடங்கு தொடர்ந்து பற்றி எரிந்துவருகிறது.

இஸ்ரேல் நடத்திய இந்த மனிதத் தன்மையற்ற தாக்குதல்களில் ஈரானைச் சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக ஈரானை ஆட்சிசெய்துவரும் ஈரானிய மதகுருவான அயத்துல்லா அலி கமேனியை தீர்த்துக்கட்டினால் மட்டுமே இஸ்ரேல் - ஈரான் இடையேயான போருக்கு முடிவு கிடைக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், முன்னாள் ஈராக் தலைவர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதியை கமேனி சந்திக்க நேரிடும் என்று கூறி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இவர்களைத் தவிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கமேனியைக் காலி செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கமேனி வெளியிட்டிருந்தப் பதிவில், “ஜியோனிஸ்ட்களுக்கு எந்தவித கருணையும் காட்டப் போவதில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை கமேனி கொல்லப்பட்டால், அவருக்குப் பின்னர் யார்? அவரது இடத்தை நிரப்பப் போவது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கமேனியை கொல்லப்படுவதில் அனைவருக்கும் ஆர்வமா? கேட்காமல் இருப்பினும் அவருக்குப் பின்னர் யார் வரப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மொஜ்தபா கமேனி

கமேனியின் இடத்தை நிரப்புபவர்களுக்கான போட்டியில் கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி முன்னணியில் உள்ளார்.

1969 இல் பிறந்தவரான மொஜ்தபா கமேனி இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஈரானின் மதகுருமார்கள் அமைப்பு ஆகிய இரண்டுடனும் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளார். ஈரான் - இராக் போரின் இறுதிக் கட்டத்தில் பணியாற்றியதால் அவருக்கு வலுவான செல்வாக்கு இருக்கிறது.

அலிரேசா அராஃபி

கமேனியின் வாரிசாக மாறப்போகிறவர்களில் மற்றொரு முக்கிய பெயர் அலிரேசா அராஃபி. இவர் கமேனியின் நம்பகமான உதவியாளர். பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர், கோமில் பிரார்த்தனைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அராஃபி வகிக்கிறார். தலைமைக்கு நெருக்கமானவர் என்பதால் இவருக்கும் பல வாய்ப்புகள் இருக்கின்றன கமேனியின் இடத்தைப் பிடிப்பதற்கு.

அலி அஸ்கர் ஹெஜாசி

கமேனியின் அலுவலகத்தில் அரசியல் பாதுகாப்பு விவகாரங்களை மேற்பார்வையிடும் அலி அஸ்கர் ஹெஜாசியும் இந்தப் போட்டியில் உள்ளார். ஈரானின் உளவுத்துறையில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள ஹெராஜி, ஈரானின் புதிய வியூக செயல்திட்டங்களில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

கோலம் ஹொசைன் மொஹ்சேனி எஜேய்

நீதித்துறை மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் பல பத்தாண்டுகளாகப் பணியாற்றிய கோலம் ஹொசைன் மொஹ்சேனி எஜேய்க்கும் கமேனியின் அரசியல் வாரிசாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் மகமத் அஹ்மதி நெஜாட்டின் கீழ் ஈரானின் உளவுத்துறை அமைச்சராக பணியாற்றிய கோலம் ஹொசைன், அட்டர்னி ஜெனரல், நீதித்துறை செய்தித் தொடர்பாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார்.

இன்னும் பிற தலைவர்கள்

கமேனியின் அலுவலகத்தில் நீண்டகாலத் தலைவராக இருந்த முகமது கோல்பாயேகானி, முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் அலி அக்பர் வேலாயதி, கமால் கராசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவர் அலி லாரிஜானி ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் அனைவருமே உள்நாட்டு நிர்வாகம் மற்றும் வெளியுறவுத் துறை விவகாரங்கள் இரண்டிலும், குறிப்பாக அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஆழ்ந்த அனுபவமுள்ள அனுபவம் வாய்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது.

முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஈரான் போர்?

இஸ்ரேல் - ஈரான் இருநாடுகளும் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் முடிவு எட்டப்படாமல் பலர் கொல்லப்படும் சூழலே நிலவுகிறது. அணு ஆயுத போரை முடிவுக்குகொண்டு வருவதற்கு கமேனியின் உயிர் மட்டுமே தீர்வு என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீர்க்கமாகவுள்ளார். எதுவாயினும், இந்தப் போருக்கான முடிவு நெதன்யாகுவிடம்தான் உள்ளது.

இதையும் படிக்க |போர் தொடங்கிவிட்டது! டிரம்ப் அச்சுறுத்தலுக்கு கமேனி பதிலடி!!

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

இஸ்ரேல் - ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனே... மேலும் பார்க்க

போர் தொடங்கிவிட்டது! டிரம்ப் அச்சுறுத்தலுக்கு கமேனி பதிலடி!!

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், போர் தொடங்கிவிட்டது என்று ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா ... மேலும் பார்க்க

கனடா பிரதமர் கார்னியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கனடா தலைமையில் ஆல்பர்ட்டா மாகா... மேலும் பார்க்க

மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: ஈரானில் 565 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையு... மேலும் பார்க்க