செய்திகள் :

போர் தொடங்கிவிட்டது! டிரம்ப் அச்சுறுத்தலுக்கு கமேனி பதிலடி!!

post image

இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், போர் தொடங்கிவிட்டது என்று ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கமேனி பதுங்கியிருக்கும் இடம் தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும், நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுவது போல பதிவிட்டிருந்தார்.

அதாவது, டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில், ஈரானின் உச்ச தலைவராக அறியப்படுபவரைக் கொல்ல இப்போதைக்கு திட்டம் தீட்டவில்லை. அவர் பதுங்கியிருக்குமிடம் எங்களுக்குத் தெரியும். அவர் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைவதே சிறந்த தீர்வு. அமெரிக்காவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு அடுத்த சில வினாடிகளில், கமேனி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அடுத்தடுத்த பதிவுகள் மூலம் பதிலளித்துள்ளார். பயங்கரவாதி சியோனிஸ்ட் ஆட்சிக்கு நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். சியோனிஸ்ட்டுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று பதிவிட்டிருந்தார்.

இஸ்ரேல் மீது, இன்று காலை ஈரானி இரண்டு சுற்று ஏவுகணைத் தாக்குதலை நடத்திய சற்று நேரத்துக்கெல்லாம் இந்த பதிவு போடப்பட்டுள்ளது.

போர் ஏன்? என்ன காரணம்?

ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுடன் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கியது.

அதைத் தொடா்ந்து ஈரானில் தனது வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீதான சரமாரி தாக்குதல்களை தொடா்ந்தது. தொடர்ந்து ஆறு நாள்களாக நீடிக்கும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 போ் உயிரிழந்தனா்; சுமாா் 1,800 போ் காயமடைந்தனா். ஈரான் நடத்திய தாக்குதலில் 24 இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா்; சுமாா் 600 போ் காயமடைந்தனா்.

2024-ல் டிரம்பை ஆதரித்த வாக்காளர்களில் 64% பேர் போருக்கு எதிராக உள்ளனர்!

இஸ்ரேல் - ஈரான் போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 சதவீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் ... மேலும் பார்க்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!

இந்தோனேசியா நாட்டிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை வெடித்து அப்பகுதி முழுவதும் சாம்பல் படலம் மற்றும் புகைப் பரவியதால், அங்குள்ள ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தோனே... மேலும் பார்க்க

கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?

ஈரான் மதகுரு அயத்துல்லா அலி கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால் ஈரானின் புதிய தலைவராக யார் தேர்தெடுக்கப்படுவார்கள் என கருத்துகள் எழுந்திருக்கின்றன.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெ... மேலும் பார்க்க

கனடா பிரதமர் கார்னியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களைச் சந்திப்பதற்காக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கனடா தலைமையில் ஆல்பர்ட்டா மாகா... மேலும் பார்க்க

மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: ஈரானில் 565 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையு... மேலும் பார்க்க