செய்திகள் :

சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை வேண்டுமா?

post image

சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Pilot(Contract basis)

காலியிடங்கள்: 2

சம்பளம்: பயிற்சி விமானி (பயிற்சியின் போது)மாதம் ரூ.1,50,000,

தகுதி: மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் வெளிநாட்டுக்குச் செல்லும் கப்பல் பைலட்-க்கான முதுகலைப் பட்டம்(எப்ஜி) அல்லது தகுதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமமான(சிஓசி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பைலட்டாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும். துறைமுக தலைமை மருத்துவ அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட உடல்நலன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வெளிநாடுகளுக்குச் செல்லும் கப்பலில் மாலுமியாகபணியாற்றிய அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 6 மாதம் உதவித் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் மேற் கண்ட வேலைவாய்ப்பு பற்றிய விபரம் மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப் பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 25 ஆம் தேதிக்கு முன்னரே வந்து சேறுமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy Conservator, Marine Department, Chennai Port Authority, Rajaji Salai, Chennai. Pin-600 001

நேர்முகத் தேர்வு நடைபெறும் கடைசி நாள்: 25.6.2025

நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty Resource Personகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.80,000... மேலும் பார்க்க

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் ஆசிரியரல்லாத குரூப் 'ஏ', 'பி' மற்றும் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வர... மேலும் பார்க்க

டைடல் பார்க்கில் பொறியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சி, மதுரை டைடல் பார்க்கில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பொறியாளர்(எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்னை டைடல் பார்க் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு... மேலும் பார்க்க

வேலை... வேலை... வேலை... தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் உதவியாளர் வேலை!

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

6,734 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே முடிவு

புது தில்லி: தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 6,734 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக, அனைத்து ரயில்வே கோட்டங்களில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்கள் குற... மேலும் பார்க்க

திருச்சி என்ஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோஸியேட் - II பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Proje... மேலும் பார்க்க