செய்திகள் :

Modi : 'பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் இல்லை!' - ட்ரம்பிடமே கூறிய மோடி

post image

"இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலில் அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டி 'நான் தான்' மத்தியஸ்தம் செய்து வைத்தேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் பதிவில், "இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தியது போல..." என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இது இந்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடியை தந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ட்ரம்பின் இந்தக் கூற்று குறித்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பி வருகிறது.

மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி
மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசியுள்ளார்...

"ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துகொள்வதாக இருந்தது. ஆனால், ட்ரம்ப் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சீக்கிரம் கிளம்பியதால், இந்தச் சந்திப்பு நிகழவில்லை.

இந்தியா, பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தமா?

ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று, இரு தலைவர்களும் இன்று தொலைப்பேசியில் பேசினார்கள். இந்தப் போன்காலில் ட்ரம்பிடம் மோடி, முழு சம்பவத்தின் போதும், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எந்த மட்டத்திலும் பேசப்படவில்லை மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தை அமெரிக்கா செய்யவில்லை என்று தெளிவாக கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவத் தாக்குதல் நிறுத்தப் பேச்சுவார்த்தை, முழுக்க முழுக்க இரு நாட்டு ராணுவத்தினாலும் செய்யப்பட்டது; இது பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது ஆகும்.

இந்தியா எந்த மத்தியத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை, இப்போதும் அது ஒத்துக்கொள்ளாது... இனியும் செய்யாது என்று அழுத்தமாக மோடி தெரிவித்தார். இந்தப் பிரச்னையில், முழுமையான அரசியல் ஒருமித்த கருத்து உள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தியாவிற்கு வர ஆவல்! - ட்ரம்ப்

கனடாவில் இருந்து திரும்பும்போது, அமெரிக்காவிற்கு வரமுடியுமா என்று ட்ரம்ப் கேட்டார். ஆனால், ஏற்கனவே உள்ள கமிட்மெண்டுகளின் காரணமாக, 'அமெரிக்காவிற்கு வரமுடியாது' என்று மோடி தெரிவித்துவிட்டார். விரைவில் இருவரும் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்த குவாட் மீட்டிங்கிற்கு, இந்தியாவிற்கு ட்ரம்பை அழைத்துள்ளார் ட்ரம்ப். ட்ரம்பும் இந்த அழைப்பை ஏற்றுள்ளார். மேலும், அவர் இந்தியாவிற்கு வர ஆவலாக உள்ளதாகவும் கூறியிருக்கிறார்".

இந்தத் தொலைபேசி உரையாடல் 35 நிமிடங்களுக்கு நீண்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுச்சேரி: `கல்வி இந்திய குருகுல முறையுடன் ஒத்துப் போக வேண்டும்’ - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

`சனாதனம் ஒற்றுமையை போதிக்கிறது..!’புதுச்சேரிக்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக வந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இறுதி நாளான நேற்று புதுச்சேரி மத்தியப் ப... மேலும் பார்க்க

'பி.டி.ஆர் கொடுத்த வாக்குமூலம்; ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்' - வலியுறுத்தும் அன்புமணி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு முதல்வரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார... மேலும் பார்க்க

``மதுரை மேற்கில் உதயசூரியன் உதிக்காது, மறையத்தான் செய்யும்" - செல்லூர் ராஜூ ஆவேசம்

தன்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட விவரங்களை திமுகவினர் சேகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தத... மேலும் பார்க்க

'யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்' - திண்டுக்கல் லியோனி

வருகிற ஜுன் 22 ஆம் தேதி மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முத... மேலும் பார்க்க

'அண்ணன் ஸ்டாலினின் வாரிசு குடும்ப வாரிசு இல்லை; கருத்தியல் வாரிசு' - சொல்கிறார் திருமாவளவன்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “கட்சிக்கான ஒரு பேனர் அறிவித்த உடன் முதல்வராகிவிடலாம் என்று நினைத்துவிடுகிறார்கள். இன்னும் சொல்ல... மேலும் பார்க்க

சொந்த அக்காவிடம் ரூ.17 கோடி மோசடி - மலேசியாவுக்கு தப்ப முயன்ற அதிமுக கவுன்சிலர் கைது - என்ன நடந்தது?

சொந்த அக்காவிடமே ரூ.17 கோடியை மோசடி செய்துள்ளார் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் ராஜா. இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகன் ஆவார். தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு அதிம... மேலும் பார்க்க