கமேனி ஒருவேளை கொல்லப்பட்டால்... ஈரானின் புதிய தலைவர் பதவி யாருக்கு?
Modi : 'பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் இல்லை!' - ட்ரம்பிடமே கூறிய மோடி
"இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலில் அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டி 'நான் தான்' மத்தியஸ்தம் செய்து வைத்தேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் பதிவில், "இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தியது போல..." என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இது இந்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடியை தந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ட்ரம்பின் இந்தக் கூற்று குறித்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசியுள்ளார்...
"ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துகொள்வதாக இருந்தது. ஆனால், ட்ரம்ப் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சீக்கிரம் கிளம்பியதால், இந்தச் சந்திப்பு நிகழவில்லை.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தமா?
ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று, இரு தலைவர்களும் இன்று தொலைப்பேசியில் பேசினார்கள். இந்தப் போன்காலில் ட்ரம்பிடம் மோடி, முழு சம்பவத்தின் போதும், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எந்த மட்டத்திலும் பேசப்படவில்லை மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தை அமெரிக்கா செய்யவில்லை என்று தெளிவாக கூறினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவத் தாக்குதல் நிறுத்தப் பேச்சுவார்த்தை, முழுக்க முழுக்க இரு நாட்டு ராணுவத்தினாலும் செய்யப்பட்டது; இது பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்டது ஆகும்.
இந்தியா எந்த மத்தியத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை, இப்போதும் அது ஒத்துக்கொள்ளாது... இனியும் செய்யாது என்று அழுத்தமாக மோடி தெரிவித்தார். இந்தப் பிரச்னையில், முழுமையான அரசியல் ஒருமித்த கருத்து உள்ளது.

இந்தியாவிற்கு வர ஆவல்! - ட்ரம்ப்
கனடாவில் இருந்து திரும்பும்போது, அமெரிக்காவிற்கு வரமுடியுமா என்று ட்ரம்ப் கேட்டார். ஆனால், ஏற்கனவே உள்ள கமிட்மெண்டுகளின் காரணமாக, 'அமெரிக்காவிற்கு வரமுடியாது' என்று மோடி தெரிவித்துவிட்டார். விரைவில் இருவரும் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அடுத்த குவாட் மீட்டிங்கிற்கு, இந்தியாவிற்கு ட்ரம்பை அழைத்துள்ளார் ட்ரம்ப். ட்ரம்பும் இந்த அழைப்பை ஏற்றுள்ளார். மேலும், அவர் இந்தியாவிற்கு வர ஆவலாக உள்ளதாகவும் கூறியிருக்கிறார்".
இந்தத் தொலைபேசி உரையாடல் 35 நிமிடங்களுக்கு நீண்டுள்ளது.