செய்திகள் :

சொந்த அக்காவிடம் ரூ.17 கோடி மோசடி - மலேசியாவுக்கு தப்ப முயன்ற அதிமுக கவுன்சிலர் கைது - என்ன நடந்தது?

post image

சொந்த அக்காவிடமே ரூ.17 கோடியை மோசடி செய்துள்ளார் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் ராஜா. இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் மகன் ஆவார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜா. இவரது மனைவி அனுஷா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ராஜாவின் அக்கா பொன்னரசியிடம் தனது நிறுவனமான ஒம்மீனா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் முதலீடு செய்யுமாறும், அப்படி செய்தால், அந்த நிறுவனத்தின் 16 சதவிகித பங்கை பொன்னரசிக்கு தருவதாகவும் கூறியுள்ளனர்.

மோசடி
மோசடி

இதை நம்பி, பொன்னரசி தனது கணவர் அசோக் குமாருக்கு நந்தம்பாக்கத்தில் இருக்கும் 2 ஏக்கர் சொத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து, வங்கியில் ரூ.11 கோடி கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். பொன்னரசி முதலீடு செய்த ரூ.11 கோடியை ராஜா அவருக்கு தெரியாமல் அஷுன் எக்ஸிம் என்ற வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி உள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொடங்க உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் கூடுதல் பங்கு தருவதாகவும் ராஜா கூறியுள்ளார். இதற்கும் பொன்னரசி தனது 300 சவரன் நகையை அடமானம் வைத்து ராஜாவிடம் பணம் கொடுத்திருக்கிறார். இந்த பணத்தில் ராஜா அவரது பெயரில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார்.

போலி கையெழுத்து

பின்னர், பொன்னரசிக்கு இந்தத் தொழிலில் பங்கு கொடுக்கக்கூடாது என்று அவரைப் போல போலி கையெழுத்து போட்டு, அவரது பங்குகளை தனது பெயருக்கு மாற்றியிருக்கிறார். கூடவே, போலி கையெழுத்து போட்டு பொன்னரசியின் ராஜினாமா கடிதத்தையும் தயார் செய்துள்ளார்.

இந்த இரு சம்பவத்தின் மூலமும் ராஜா தனது அக்கா பொன்னரசியிடம் இருந்து கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என பொன்னரசி சென்னை மத்திய குற்றப் பிரிவின் ராஜா மீது புகார் கொடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

இந்தப் புகாரைத் தொடர்ந்து, ராஜா வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிடக் கூடாது என்று அவருக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், ராஜா சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு தப்பி செல்ல முயன்றிருக்கிறார். அதனால், அவரை அங்கேயே கைது செய்திருக்கிறது காவல் துறை.

பின்னர், மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு வழக்குகள் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

புதுச்சேரி: `கல்வி இந்திய குருகுல முறையுடன் ஒத்துப் போக வேண்டும்’ - துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்

`சனாதனம் ஒற்றுமையை போதிக்கிறது..!’புதுச்சேரிக்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக வந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இறுதி நாளான நேற்று புதுச்சேரி மத்தியப் ப... மேலும் பார்க்க

'பி.டி.ஆர் கொடுத்த வாக்குமூலம்; ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்' - வலியுறுத்தும் அன்புமணி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு முதல்வரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார... மேலும் பார்க்க

``மதுரை மேற்கில் உதயசூரியன் உதிக்காது, மறையத்தான் செய்யும்" - செல்லூர் ராஜூ ஆவேசம்

தன்னுடைய மதுரை மேற்கு தொகுதியில் அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட விவரங்களை திமுகவினர் சேகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தத... மேலும் பார்க்க

'யார் அந்த சார்? என்ற பிரசாரத்தை செய்து அசிங்கப்பட்டது எடப்பாடிதான்' - திண்டுக்கல் லியோனி

வருகிற ஜுன் 22 ஆம் தேதி மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முத... மேலும் பார்க்க

Modi : 'பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் எதுவும் இல்லை!' - ட்ரம்பிடமே கூறிய மோடி

"இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலில் அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டி 'நான் தான்' மத்தியஸ்தம் செய்து வைத்தேன்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இப்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ர... மேலும் பார்க்க

'அண்ணன் ஸ்டாலினின் வாரிசு குடும்ப வாரிசு இல்லை; கருத்தியல் வாரிசு' - சொல்கிறார் திருமாவளவன்

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “கட்சிக்கான ஒரு பேனர் அறிவித்த உடன் முதல்வராகிவிடலாம் என்று நினைத்துவிடுகிறார்கள். இன்னும் சொல்ல... மேலும் பார்க்க