செய்திகள் :

அமர்நாத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கத் திட்டம்!

post image

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறைக்கு அமர்நாத் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை நிகழவுள்ளது. இந்த நிலையில் அனந்த்நாத் மாவட்டத்தில் பாரம்பரிய 48 கி.மீ, பஹல்காம் பாதை,

கண்டர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ குறுகிய பால்டால் பாதையில் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்வார்கள்.

முதல் தொகுதி பக்தர்கள் யாத்திரை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு பகவதி நகரிலிருந்து காஷ்மீருக்குப் புறப்படுவார்கள். இந்த நிலையில், அனைத்து அதிகாரிகளும் குறிப்பாக இரவு நேரங்களில் சோதனைச் சாவடிகளை வலுப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக ஜம்மு-சம்பா-கதுவா எல்லைப் பகுதியின் துணை ஆய்வாளர் ஷிவ் குமார் சர்மா,

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக, பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஜம்மு, சம்பா, கதுவா ஆகிய எல்லை மாவட்டங்களில் கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடிப்படை முகாம், அதைச் சுற்றியுள்ள பல்வேறு காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பு தணிக்கையின் போது ​​காவல்துறை அதிகாரிகளுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ராம் மந்திர் புராணி மண்டி, கீதா பவன் பரேட், பகவதி நகரில் உள்ள அடிப்படை முகாம், பல்வேறு வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஆகியவற்றில் சர்மா பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளும் விழிப்புடன் இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க

சகோதரரின் இறுதிச் சடங்கு: விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் பங்கேற்பு!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார், தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நொடிகளில் க... மேலும் பார்க்க

கேரளத்தில் தொடரும் கனமழை! மீண்டும் ஆரஞ்ச் அலர்ட்!

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் அங்குள்ள சில மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்க... மேலும் பார்க்க