செய்திகள் :

ஜூன் 20ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

post image

'மா' விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுக அரசைக் கண்டித்தும் வருகிற ஜூன் 20 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழகத்தில் நெல், கரும்பு சாகுபடிகளைத் தொடர்ந்து அதிக நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்படுவது 'மா' மற்றும் 'தென்னை'. சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேரில் 'மா' சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தில், மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட 'மா' விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.

மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 4 முதல் 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 'மா' விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000/- ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகளைப் போக்கவும், மேலும் அவர்கள் தெரிவித்துள்ள மற்ற கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.6.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி எம்எல்ஏ தலைமையிலும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், 'மா விவசாயிகள்', வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க | ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாந... மேலும் பார்க்க

தீர்வு கண்ட பிறகும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக? - அமைச்சர் கேள்வி

'மா' சாகுபடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பிறகும் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது எதற்காக? என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். '... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 விருது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.புதுதில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநா... மேலும் பார்க்க

டாஸ்மாக்: ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் வீடுகளில் சீல்களை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சீல்களை அகற்றவும் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்கவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் தமிழில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கின்போது தமிழில் வேதங்கள் ஓதப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 7 ஆம் தேதி (திங்கள... மேலும் பார்க்க