செய்திகள் :

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை டிரம்ப் சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம்! காங்கிரஸ்

post image

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் இன்று தொலைபேசியில் பேசியதாகவும், உரையாடலின் போது, ​​வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாகவும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுக்கு 5 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை இன்று(ஜூன் 18) வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அதிபர் டிரம்ப், அவருடன் மதிய உணவு விருந்தில் ஈடுபடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம் ரமேஷ் பேசியதாவது:

“கடந்த 37 நாள்களாக பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்று டிரம்ப்புடன் 35 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. டிரம்ப்பிடம் பேசியது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையும் இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இரண்டிலும் வேறுபாடு உள்ளது.

அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை, நாங்கள் மத்தியஸ்தத்தை நிராகரிக்கிறோம் என்று டிரம்பிடம் மோடி கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 நாள்களாக அமைதியாக இருந்தவர் டிரம்ப்பிடம் இதை சொன்னதாக நம்மை நம்பச் சொல்கிறார்கள். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமரால் ஏன் அழைக்க முடியாது? வெளியுறவு செயலர் சொன்னதை எதிர்க்கட்சித் தலைவர்களிடம் நேரடியாகச் சொல்லுங்கள்.

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கும் இடையேயான நேரடி தொடர்பை டிரம்ப்பிடம் மோடி கூறியிருக்க வேண்டும். அசிம் முனிர் கருத்தின் பிரதிபலிப்பாக பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது அதே நபரை அமெரிக்க அதிபர் மதிய உணவுக்கு அழைத்திருப்பது இந்தியாவுக்கான அவமானம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?

தேனிலவுக்கு முன் காதலனுடன் தப்பிய புது மணப்பெண்! நல்லவேளை, உயிர் பிழைத்தேன் என மணமகன் மகிழ்ச்சி!

உத்தரப் பிரதேசத்தில் திருமணமான ஒரு மாதத்துக்குள் காதலனுடன் பெண் சென்ற நிலையில், பேச்சுவார்த்தை மூலம் புதுமணத் தம்பதியை குடும்பத்தினர் பிரித்துவைத்தனர்.பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் (வயது 23).... மேலும் பார்க்க

அமர்நாத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கத் திட்டம்!

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறைக்கு அமர்நாத் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தே... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடப்பதற்காக பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக்கில் ஆண்டு சந்தா முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உள்பட சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு ச... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்துக்கு அதிக எடை காரணம்? - முன்னாள் விமானி அதிர்ச்சி கருத்து!

அகமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் அதிக எடை காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் விமானி ஒருவர் கூறியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் க... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் புதிய மாடல் மஹிந்த்ரா பொலிரோ!

மஹிந்த்ரா நிறுவனத்தில் பொலிரோவின் புதிய மாடல் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரில் உள்ள வியக்க வைக்கும் விஷயங்கள் குறித்து பார்க்கலாம். இந்திய மக்களிடையே அடிப்... மேலும் பார்க்க

தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் காரணமல்ல?

மேகாலயத்தில நடந்த தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் பின்னணியாக இருக்கும் என்று காவல்துறை கருதுவில்லை, பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மேகாலய காவல்துறை இயக்குந... மேலும் பார்க்க