செய்திகள் :

தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் காரணமல்ல?

post image

மேகாலயத்தில நடந்த தேனிலவுப் படுகொலைக்கு முக்கோணக் காதல் மட்டும் பின்னணியாக இருக்கும் என்று காவல்துறை கருதுவில்லை, பல்வேறு கோணங்களிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மேகாலய காவல்துறை இயக்குநர் இடாஷிஷா நோங்ராங் தெரிவித்துள்ளார்.

மேகாலயத்துக்கு தேனிலவு சென்றிருந்தபோது, ராஜா ரகுவன்ஷி மே 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், அவரது மனைவி சோனம், காதலர் ராஜ், கூலிப் படையைச் சேர்ந்த மூன்று பேர் ஜூன் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்து வரும் மேகாலய காவல்துறை இயக்குநர் இடாஷிஷா நோங்ராங் கூறுகையில், வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், ராஜா ரகுவன்ஷி கொலைக்குப் பின்னணியில் இருப்பதாகக் குற்றவாளிகள் தரப்பில் கூறப்படும் தகவல்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா என்ற கோணத்தில்தான் விசாரித்து வருகிறோம் என்றார்.

மேலும், திருமணமாகி ஒரு சில நாள்களுக்குள்ளேயே, ஒருவரைக் கொலை செய்துவிடும் அளவுக்கு வன்மம் அதிகரித்தது ஏன் என்பதைக் கண்டறிய வேண்டும். மேலோட்டமாகப் பார்த்தால், முக்கோணக் காதல்தான் கொலைக்குக் காரணமாக இருப்பது போல தோன்றலாம். ஆனால், தனிப்பட்ட முறையில், அது ஒன்றுதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் இடாஷிஷோ கூறியிருக்கிறார்.

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க