செய்திகள் :

ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் புதிய மாடல் மஹிந்த்ரா பொலிரோ!

post image

மஹிந்த்ரா நிறுவனத்தில் பொலிரோவின் புதிய மாடல் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரில் உள்ள வியக்க வைக்கும் விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்திய மக்களிடையே அடிப்படைப் போக்குவரத்துக்கான தேவையை அதிகம் நிறைவு செய்த கார்களில் மஹிந்த்ராவின் பொலிரோவும் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அதிகளவில் அரசுத் துறை வாகனமாகவும் பொலிரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எஸ்யுவி வகை கார்களைத் தயாரிக்கும் மஹிந்த்ரா நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்தியாவில் கொடிகட்டி பறந்து வருகிறது. இருந்தாலும், வேறு எந்த மாறுதல்களையும் இந்த காரில் பயன்படுத்தவே இல்லை. அதைத் தொடர்ந்து டியுவி300 பொலிரோ நியோ என்ற காரை அறிமுகம் செய்தது. அதை விட்டுவிட்டு புதிய மாடல் ஒன்றை வெளியிட மஹிந்த்ரா நிறுவனம் தயாராகவுள்ளது.

இந்த காரானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படவுள்ளதாகவும், இது மஹிந்த்ரா தார் ஸ்போர்ட் என்றழைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் கைபிடிகள் உள்ளே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சொகுசாக இருக்கும் வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் டிஎஃப்டி திரை, இரண்டு வகை காலநிலை கட்டுப்பாடு, சன் ரூபிங், நல்ல காற்றோட்டமான முன்பக்க இருக்கை ஆகியவை உள்ளன.

வியக்கவைக்கும் அம்சங்கள்

தானகவே இயங்கும் வகையிலான ஹெட் லைட்டுகள் மற்றும் வைப்பர்கள், சாவி இல்லாமலேயே கதவைத் திறக்க சென்சார்கள், வாகனத்த ஆன் மற்றும் ஆஃப் செய்ய புஷ் பட்டன் ஆகியவை உள்ளன. இது மிகவும் விலைமிக்க காரை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

என்ஜின் செயல்பாடு

இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் வகை என இரண்டும் உள்ளன. ஸ்கார்பியோ போன்ற மாறுதலுடன்கூட திறனைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

மஹிந்திரா பொலிரோவின் விலை ரூ.10.00 முதல் ரூ.12.50 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

  • அடிப்படை (B4): சுமார் ரூ.10 லட்சம்.

  • மிட்-ரேஞ்ச் மாடல் (B6): ரூ.10.50 லட்சம்.

  • சிறந்த மாடல் (B6): ரூ.10.93 லட்சம்.

இதையும் படிக்க: ஸ்மார்ட்போன்களில் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்குமா? அறிமுகமாகிறது போக்கோ எஃப் 7

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க