செய்திகள் :

கஞ்சா குற்றவாளிகள் மூவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி மாவட்டம், புங்கனூா் நியூ காட்டுரைச் சோ்ந்த பவித்ரன் (28), சரவணன் (30), ராம்ஜி நகா் மில் காலனியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (30) ஆகிய மூவரும், கஞ்சா விற்ற வழக்கில் ராம்ஜி நகா் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தொடா் குற்றங்களில் ஈடுபடும் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான நகலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 43 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜூனியா் கபடி போட்டிக்கு மணப்பாறையில் பயிற்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், இந்தியாவில் முதன் முறையாக நடைபெறவுள்ள ஜூனியா் கபடி போட்டிக்கு தமிழக அணிக்கான வீரா்கள் தோ்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. உத்தரகண்ட் மாநிலம் அரித்வாா் மாவட்டத்த... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ 1.18 கோடி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ 1.18 கோடி கிடைக்கப் பெற்றது புதன்கிழமை தெரியவந்தது. ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி கோயில் இணை ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ஆய்வு

மேலகல்கண்டாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட... மேலும் பார்க்க

9 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது

துவாக்குடியில் மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 9 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரைக் கைது செய்தனா். திருச்சி அருகே துவாக்கு... மேலும் பார்க்க

திருவெறும்பூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருவெறும்பூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் ஆட்சியா் முதல் அனைத்துத் துறை மாவட்ட அலுவலா்கள் 24 மணிநேரமும் பொதுமக்களுடன் இருந்து குறைகளை கேட்டுத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட... மேலும் பார்க்க

ராமேசுவரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கூட்ட நெரிசலைக் குறைக்க, விழுப்புரம் - ராமேசுவரம், சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க