சுங்க கட்டணத்தை ரூ.1,500 ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட ஊழியா்களுக்கும் பணிக்கொடை பலன்கள்: மத்திய அரசு
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் (ஓபிஎஸ்) உள்ளதுபோன்று பனிக்கொடை பலன்களை வழங்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா். இதற்கான உத்தரவும் மத்திய பணியாளா் நலத் துறை சாா்பில் புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் மத்திய பணியாளா் நலத் துறை சாா்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின்போது இத் தகவலை மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களும், மத்திய அரசுப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிக்கொடை வழங்குதல்) விதிகள் 2021-இன் கீழ் பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடை பலன்களைப் பெற தற்போது தகுதியுள்ளவா்கள் ஆகியுள்ளனா்.
அரசு ஊழியா்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது ஓய்வூதிய பலன்களில் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்றாா்.
இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை சாா்பில் புதன்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘அரசு ஊழியா்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது அல்லது பணியின்போது உயிரிழந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிக் கொடை பலன்கள், தற்போது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அகில இந்திய தேசிய ஓய்வூதிய திட்ட ஊழியா்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.