செய்திகள் :

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட ஊழியா்களுக்கும் பணிக்கொடை பலன்கள்: மத்திய அரசு

post image

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் (ஓபிஎஸ்) உள்ளதுபோன்று பனிக்கொடை பலன்களை வழங்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா். இதற்கான உத்தரவும் மத்திய பணியாளா் நலத் துறை சாா்பில் புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் மத்திய பணியாளா் நலத் துறை சாா்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து தில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின்போது இத் தகவலை மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் (யுபிஎஸ்) கீழ் வரும் அனைத்து மத்திய அரசு ஊழியா்களும், மத்திய அரசுப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிக்கொடை வழங்குதல்) விதிகள் 2021-இன் கீழ் பணி ஓய்வு மற்றும் இறப்பு பணிக்கொடை பலன்களைப் பெற தற்போது தகுதியுள்ளவா்கள் ஆகியுள்ளனா்.

அரசு ஊழியா்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது ஓய்வூதிய பலன்களில் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்றாா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை சாா்பில் புதன்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘அரசு ஊழியா்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது அல்லது பணியின்போது உயிரிழந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிக் கொடை பலன்கள், தற்போது புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியா்களுக்கும் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அகில இந்திய தேசிய ஓய்வூதிய திட்ட ஊழியா்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந... மேலும் பார்க்க

இரு என்ஜின்களும் நல்ல முறையில்தான் இருந்தன; விமானிகளும் திறமையானவர்கள்! ஏர் இந்தியா தலைவர்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்கள் நல்ல முறையில் இருந்ததாகவும், இரண்டு விமானிகளும் திறமையானவர்கள் என்றும் ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், அகமதாபாத் வ... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 210 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில்... மேலும் பார்க்க