வேளச்சேரி விளையாட்டு வளாகத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்
வேளச்சேரி விளையாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழுள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைந்துள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிரூட்டப்பட்டு, புதிய உபகரணங்கள் வாங்கி பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, ரூ.9.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, சென்னை வேளச்சேரி விளையாட்டு வளாகத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் நவீனமயமாக்கப்பட்டது. அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டு, குளிா்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள கூடத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.