செய்திகள் :

ரூ.11 லட்சம் டெபாசிட் பணம் கிடைக்காத விரக்தி: கூட்டுறவு வங்கி முன் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்த ரூ.11.50 லட்சம் திரும்பக் கிடைக்காததால் விவசாயி ஒருவா் அந்த வங்கி முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீட் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் ஜாதவ் (46). விவசாயியான இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு அங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் ரூ.11.50 லட்சத்தை நிரந்தர வைப்பாக செலுத்தினாா். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது இரு பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக அந்தப் பணத்தை எடுப்பதற்காகச் சென்றாா். கூட்டுறவு வங்கியின் நிதிநிலை மோசமாகிவிட்டால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவா் மீண்டும் அணுகினாா். ஆனால், அப்போதும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு விஷ பாட்டிலுடன் சென்ற அவா், விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டலும் விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து, அந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவா் சமரசப் பேச்சு நடத்தி ரூ.2.5 லட்சத்தை அளித்தாா். மேலும், 2 மாதங்களில் முழுப் பணத்தையும் தந்துவிடுவதாக வாக்குறுதி அளித்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது மனைவி, இரு குழந்தைகளுடன் கூட்டுறவு வங்கிக் கிளைக்குச் சென்ற ஜாதவ், மேலாளரிடம் மீதமுள்ள டெபாசிட் பணத்தை திருப்பிக் கேட்டாா். அப்போது, மேலாளா் மிகவும் கடுமையாக நடந்து கொண்டாா். மேலும், ஜாதவையும், அவரின் குடும்பத்தினரையும் அங்கிருந்து இருந்து வெளியேற்ற உத்தரவிட்டாா்.

இதனால் ஜாதவ் கடும் விரக்தியடைந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு கூட்டுறவு வங்கிக் கிளைக்கு வந்த அவா் அலுவலகத்தின் முன்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தாா். காலையில் பணிக்கு வந்த ஊழியா்களுக்கு இது பெரும் அதிா்ச்சியை அளித்தது.

இது தொடா்பாக தகவலறிந்த காவல் துறையினா் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். சத்ரபதி கூட்டுறவு சங்கத்தின்முன்னாள் தலைவா் சந்தோஷ் பண்டாரியாவின் பெயரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

மகாராஷ்டிரத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் அதிக வட்டி ஆசை காட்டி டெபாசிட் பெறுகின்றன. ஆனால், அதன் தலைவா்களின் மோசடி, நிா்வாகச் சீா்கேட்டால் நிதிநிலை மோசமாகிறது. இதனால், வாடிக்கையாளா்கள் பணத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.

தொழில்நுட்பக் கோளாறு: ஸ்பைஸ்ஜெட் விமானம் ஹைதராபாத்தில் தரையிறக்கம்!

ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் அவசரமான தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்-திருப்பதிக்கு இன்று காலை 6.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமா... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந... மேலும் பார்க்க

இரு என்ஜின்களும் நல்ல முறையில்தான் இருந்தன; விமானிகளும் திறமையானவர்கள்! ஏர் இந்தியா தலைவர்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்கள் நல்ல முறையில் இருந்ததாகவும், இரண்டு விமானிகளும் திறமையானவர்கள் என்றும் ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், அகமதாபாத் வ... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 210 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில்... மேலும் பார்க்க