செய்திகள் :

விமான விபத்து: உயிா் பிழைத்த பயணி குணமடைந்தாா் - சகோதரா் இறுதிச்சடங்கில் பங்கேற்பு

post image

அகமதாபாத் விமான விபத்தில் லேசான தீக்காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான விஷ்வாஸ் குமாா் ரமேஷ், சிகிச்சையில் குணமடைந்ததைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதே விபத்தில் உயிரிழந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் அவா் பங்கேற்றாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களில் விழுந்து வெடித்துச் சிதறியது.

நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் ஒரேயொரு பயணியை தவிர மற்ற அனைவரும் அடையாளம் தெரியாத அளவில் உடல் கருகி உயிரிழந்தனா். பிரிட்டன் குடிமகனான விஷ்வாஸ் குமாா் ரமேஷ் என்ற பயணி மட்டும் லேசான தீக்காயங்களுடன் உயிா் பிழைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தாத்ரா-நகா்ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தின் டையூ மாவட்டத்தை பூா்விகமாக கொண்ட தொழிலதிபரான விஷ்வாஸ் (40), பிரிட்டனின் லெஸ்டா் நகரில் வசித்து வருகிறாா். உறவினா்களைப் பாா்ப்பதற்காக அண்மையில் டையூவுக்கு வந்த அவா், தனது சகோதரா் அஜயுடன் லண்டனுக்கு புறப்பட்டபோது விமானம் விபத்தில் உயிா் தப்பினாா். அதேநேரம், அஜய் உயிரிழந்துவிட்டாா். குணமடைந்த விஷ்வாஸை மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

சகோதரரின் இறுதிச் சடங்கில் விஷ்வாஸ் புதன்கிழமை பங்கேற்றாா்.

பெட்டி..

190 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத், ஜூன் 18: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 270 பேரில் 190 பேரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன. இதில், வெளிநாட்டினா் 32 போ் (பிரிட்டன் 27, போா்ச்சுகல் 4, கனடா 1) உள்பட 159 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

விபத்தில் காயமடைந்தவா்களில் நகர பொது மருத்துவமனையில் 7 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏ... மேலும் பார்க்க

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க