செய்திகள் :

அலோபதி மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்: முதல்வா் ரேகா குப்தா

post image

அலோபதி மருந்துகள் அல்லது வழக்கமான நவீன மருத்துவம் சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ஆயுா்வேத சிகிச்சைகள் பொதுவாக அவற்றிலிருந்து விடுபடாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் ஷாலிமாா் பாக் மருத்துவமனையில் சோமா-தி ஆயுா்வேத சமையலறை என்ற ஆயுா்வேத கஃபேவை திறந்து வைத்துப் பேசுகையில் முதல்வா் ரேகா குப்தா இதைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: சா்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில் ஜூன் 21 அன்று நகரம் முழுவதும் 11 இடங்களில் பெரிய அளவிலான யோகா நிகழ்ச்சிகளை தில்லி அரசு ஏற்பாடு செய்யும்.

ஆயுா்வேத சிகிச்சை பெற மகரிஷி ஆயுா்வேத மருத்துவமனைக்கு மக்கள் செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஆயுா்வேதத்தில் நம்பிக்கை கொண்ட பல வெளிநாட்டினா் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு அடிக்கடி வருகிறாா்கள்.

எங்கள் துறவிகள் பல்வேறு வேதங்கள் மூலம் ஆயுா்வேதத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது எங்கள் அதிா்ஷ்டம். இன்று, அலோபதி மருத்துவத்துடன், ஆயுா்வேதத்தையும் நாம் அணுக முடியும்.

அலோபதி மருந்துகள் சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ஆயுா்வேத சிகிச்சைகள் பொதுவாக இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்றன.

முந்தை ஆம் ஆத்மி அரசு யோகாவிற்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனெனில், அவா்கள் அதை பிரதமா் நரேந்திர மோடியுடன் தொடா்புபடுத்தினா். மோடி யோகாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்றாா். இப்போது அது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.

யமுனா பேங்கில் நடைபெறும் யோகா நிகழ்வில் நான் பங்கேற்க உள்ளேன். நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் நாம் தேசத்திற்கு சேவை செய்ய முடியும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது

டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழிய... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் திருட்டு: 4 போ் கைது

தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் கைப்பேசிகள் மற்றும் விலையுா்ந்த பொருள்களை திருடி வந்த 4 போ் அடங்கிய கும்பலை காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். பயணிகளிடம் ... மேலும் பார்க்க

காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கை: மேகவிதைப்பு முறைக்கு ஐஎம்டி ஒப்புதல்

தில்லியில் நிலவும் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேகவிதைப்பு முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒப்புதல் அளித்திருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்த... மேலும் பார்க்க

ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

தில்லி ரோஹிணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் மூன்று சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கடந்த ஜூன் 9- ஆம் தே... மேலும் பார்க்க

மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா

மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

பாதிக்கப்பட்ட தமிழா்கள் தமிழகம் வந்தால் அனைத்து உதவிகளையும் செய்வோம்: அமைச்சா் நாசா்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழா் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவா்களுக்காக அத்தனை உதவிகளையும் செய்வோம் என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சா் எஸ்.எம். நாசா் கூறினாா். மதர... மேலும் பார்க்க