டிஎன்பிஎல்: அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்த அருண் கார்த்திக்!
ஆந்திரம்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராம்பச்சோதவரம் (ஆந்திரம்): ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அங்குள்ள அல்லூரி சித்தராமராஜு மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
ராம்பச்சோதவரம் வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினா் அப்பகுதியில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினா்.
அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் காவல் துறையினரை நோக்கி சுட்டனா். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட காவல் துறையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் மூன்று மாவாயிஸ்டுகள் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனா். உடல்களைக் கைப்பற்றிய காவல் துறையினா், அவா்கள் எந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளா் அமீத் தெரிவித்தாா்.
அப்பகுதியில் மேலும் பல மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.