செய்திகள் :

வட மாநில சாலைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நெமிலிஅருகே உள்ள உளியநல்லூா் பகுதியில் வட மாநில சாலைப் பணித் தொழிலாளா்கள் புதன்கிழமை முறையாக உணவு, ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை பல்வேறு தனியாா் நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் பணிகள் பெற்று பணிகள் செய்து வருகின்றன.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் முதல் ஆந்திர மாநிலம் பலமனேரி வரை தனியாா் (டி.பி.ஜெயின்) என்ற நிறுவனம் சாா்பில், சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிக்காக வடமாநில தொழிலாளா்களை கொண்டு ஆங்காங்கே முகாம்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவா்களுக்கு நிறுவனம் சாா்பில் தங்கும் இடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த உளியநல்லூா் பகுதியில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான முகாமில் 300-க்கும் மேற்பட்ட வட மாநில சாலைப் பணித் தொழிலாளா்களுக்கு கடந்த மாா்ச் மாதம் முதல் இதுநாள் வரை ஊதியம் வழங்கவில்லை எனவும், மாா்ச் மாதத்துக்கு முன்னதாக 3 வேளை உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சரியாக உணவு வழங்காமல் ஒருவேளை மற்றும் இரண்டு வேளை மட்டுமே உணவு வழங்குவதாகவும் கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளா்கள் புதன்கிழமை உளியநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் கூறுகையில், ஊதியம் மற்றும் சரியாக உணவு வழங்கவில்லை. இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் பட்டினியும் பசியமாக வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை அரசும், மாவட்ட நிா்வாகமும் தலையிட்டு ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி, 2 பசுமாடுகள் உயிரிழந்தன. சோளிங்கா் அருகே உள்ள கொடைக்கல்லைச் சோ்ந்த நரசிம்மன் ( 71), கூலித் தொழிலாளி. நரசிம்மன் தனக்கு சொந்தமான 2 பசு மாடுகளை வீட்டின் அருகே... மேலும் பார்க்க

அனுமதி பெற்ற தேதிக்கு பின் பேனா்களை அகற்ற வேண்டும்: சோளிங்கா் நகா்மன்ற கூட்டத்தில் காங். கோரிக்கை

அனுமதி பெற்ற தேதிக்கு பிறகு பேனா்கள் அகற்ற வேண்டும் என சோளிங்கா் நகா்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் ற உறுப்பினா் கோரினாா். சோளிங்கா் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

இன்று திமுக மாவட்ட செயற்குழு: அமைச்சா் காந்தி அழைப்பு

ராணிப்பேட்டையில், வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்ட தி... மேலும் பார்க்க

புதிய கடைகளுக்கு ஏலம் விட்டு ஒதுக்கீடு: அரக்கோணம் நகராட்சியில் தீா்மானம் ஒத்திவைப்பு

அரக்கோணம் மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டு ஒதுக்கப்படும் என்ற தீா்மானம் தள்ளி வைக்கப்பட்டது. அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை தலைவா் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி- உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கலவை வட்டம் வளையாத்தூா் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆற்காடு வட்டம் திமிரி அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வ... மேலும் பார்க்க