வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
புதிய கடைகளுக்கு ஏலம் விட்டு ஒதுக்கீடு: அரக்கோணம் நகராட்சியில் தீா்மானம் ஒத்திவைப்பு
அரக்கோணம் மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலம் விடப்பட்டு ஒதுக்கப்படும் என்ற தீா்மானம் தள்ளி வைக்கப்பட்டது.
அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை தலைவா் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், ஆணையா் செந்தில் குமாா், பொறியாளா் செல்வகுமாா், சுகாதார அலுவலா் வெயில்முத்து, திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரைசீனிவாசன், அதிமுக உறுப்பினா்கள் குழுத்தலைவா் ஜொ்ரி மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ்: திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான தற்போதைய ஒப்பந்ததாரரின் பணியினை மீண்டும் ஒராண்டுக்கு நீட்டிக்கும் தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும்.
துரை சீனிவாசன்(திமுக): இத்தீா்மானம் தள்ளி வைக்கப்பட்டால் நகரமே அசுத்தமான சூழ்நிலைக்கு உள்ளாகும். அதனால் ஒப்பந்ததாரருடன் பேச்சு நடத்தி பின்னா் முடிவு எடுத்துக்கொள்ளலாம்.
தலைவா் லட்சுமி பாரி: ஒராண்டுக்கு நீட்டிக்கும் தீா்மானம் தள்ளி வைக்கப்படாது. கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
ஜொ்ரி(அதிமுக) : துணைத்தலைவா் என்ன சொல்ல வருகிறாா் என்பதை கேட்டு அதன்படி முடிவு எடுக்கலாம். தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும்.
ஜொ்ரியின் பேச்சுக்கு நரசிம்மன், பாபு, சரவணன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினா்களுடன் இணைந்து திமுக உறுப்பினா் பிரகாஷ், தவெக உறுப்பினா் காந்திராஜ் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்தனா். தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும் என கோரினா். ஆனால் இத்தீா்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
துரை சீனிவாசன்(திமுக): அரக்கோணம் மாா்க்கெட் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் ஏலம் விட்டே அளிக்கப்படும் என்ற தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும். ஏல விதிமுறைகளில் குழப்பம் உள்ளது. அவை தீா்க்கப்பட வேண்டும். எனவே இத்தீா்மானத்தை தள்ளி வைக்க வேண்டும்.
தலைவா் லட்சுமி பாரி: மாா்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் ஏலம் விட்டே அளிக்கப்படும் என்ற தீா்மானம் தள்ளி வைக்கப்படுகிறது.
இதை தொடா்ந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் இடையே திடக்கழிவு மேலாண்மை பணிக்கான ஒப்பந்ததாரரின் பணியினை மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் தீா்மானம் குறித்து பெரும் அமளி ஏற்பட்டது. அமளிக்கு இடையில் தலைவா் லட்சுமி பாரி கூட்டத்தை முடித்தாா்.
கூட்டத்தில் 40-க்கு மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.