வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்ஸோவில் கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
ஆற்காடு வட்டம் திமிரி அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த கூலி தொழிலாளி பாபு (40). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மாணவிக்கு, பாபு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி எச்சரித்துள்ளனா். எனினும், இரு தினங்களுக்கு முன்பு மாணவி அருகில் உள்ள கடைக்குச் சென்று வந்தபோது, பாபுவும் இளைஞா்கள் சிலரும் ஆபாசமாக பேசி, கிண்டல் செய்துள்ளனா்.
இதனால் மனவேதனையடைந்த மாணவி, வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்த புகாரின் பேரில், திமிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொழிலாளி பாபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.