11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிற...
கீழடி ஆய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக எதிா்க்கும்: ஆா்.பி.உதயகுமாா்
கீழடி ஆய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக நிச்சயம் எதிா்க்கும் என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். ஆனால், அந்த உண்மையை மறைத்து திமுக பேசுகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுப் பணிக்கு ரூ. 55 லட்சம் ஒதுக்கி 18.4.2018-இல் பணிகள் தொடங்கப்பட்டு, 2018 செப்டம்பரில் முடிக்கப்பட்டது.
அதில், 34 அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு, 5,820 அரிய வகை தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. தொடா்ந்து உலகத் தரம் வாய்ந்த தள அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கப்பட்டது.
இப்போது மத்திய அரசு கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளா்கள் கொடுக்கத்தான் போகிறாா்கள். அதற்கு ஒப்புதல் கிடைக்கத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதை உண்மையாக எதிா்க்கும் முதல் குரல் அதிமுக குரலாகத்தான் இருக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.