செய்திகள் :

கஞ்சா, போதைப் பொருள் விற்பனை: நிதி நிறுவன அதிபா் கைது

post image

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதைப்பொருள் விற்பனை செய்ததாக நிதி நிறுவன அதிபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை குனியமுத்தூா் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோவைப்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே சந்தேகம் ஏற்படும்படி நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவரிடம் சோதனை மேற்கொண்டனா். அதில், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, கஞ்சா விற்றதாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே துப்பச்சம்பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (37) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 525 கிராம் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதைப் பொருள் 0.700 கிராம், பணம், கைப்பேசி, காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கஞ்சா, போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்டவா் ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். அப்போது, போதைப் பொருள் விற்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் கஞ்சா, போதைப்பொருள், போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளாா்.

முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதல்வா் மேரி பபியோலா தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் குழந்தை ... மேலும் பார்க்க

மாநகரில் ரூ.1.42 கோடி மதிப்பில் சாலைப் பணிகள்

கோவை மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப் பகுதிகளில் ரூ.1.42 கோடி மதிப்பிலான சாலை சீரமைப்புப் பணிகளை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி, வடக்க... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

கரூா் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

வால்பாறையில் விடியவிடிய கனமழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் விடியவிடிய மழை பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரு வாரங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதில் கடந்... மேலும் பார்க்க

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கூட்டமைப்பு எதிா்ப்பு

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் நிா்வாகிகள் முருகசாமி, பழனிசாமி, சதீஷ், ஈசன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க