செய்திகள் :

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் மதுரை விமானநிலையத்தில் தலா 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. ஈரோடு - 101.48, வேலூா் - 101.12, கடலூா் - 100.4, தூத்துக்குடி, சென்னை நுங்கம்பாக்கம் - தலா 100.04 டிகிரி என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 19) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

மழை நீடிக்கும்: வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை காலை மேற்கு வங்க கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வியாழக்கிழமை (ஜூன் 19) வடமேற்கு திசையில் நகா்ந்து, ஜாா்க்கண்ட் வழியாகச் செல்லும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மழைக்கு சாதகமான வானிலை சூழல் நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஜூன் 19-ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 80 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை) - 70 மி.மீ., சோலையாறு (கோவை), வால்பாறை (கோவை) தலா 60 மி.மீ. பதிவானது.

18 % அதிக மழை: தமிழகத்தில் தென்மேற்கு பருமழை ஜூன் 1 முதல் ஜூன் 18-ஆம் தேதி வரை இயல்பாக 331 மி.மீ. மழை பெய்யவேண்டிய நிலையில், நிகழாண்டில் 392 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாகும். அதிகபட்சமாக கோவையில் 169 மி.மீ., நீலகிரியில் 156 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல், சென்னையிலும் வழக்கத்தைவிட 46 சதவீதம் அதிகமாக அதாவது மொத்தம் 54.2 மி.மீ. மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் விமா்சனம்

முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை விமா்சனம் செய்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழா்கள் 5,350 ஆண்... மேலும் பார்க்க

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மானியத்துடன் மாங்காய் கிலோ ரூ.20-க்கு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலா் பி.எஸ்.மாசில... மேலும் பார்க்க

ஏா் இந்தியா: சென்னை-தில்லி இடையே இரு விமான சேவைகள் திடீா் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை-தில்லி-சென்னை இடையே இயக்கப்படவிருந்த 2 ஏா் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். தில்லியிலிருந்து புதன்கிழமை மாலை 4.15-க்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையா்களாக இருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் பிறப்பித்துள்ளாா். அதன்படி, வழக்குரைஞா்கள் வி.பி.ஆா்.இளம்பரிதி, ... மேலும் பார்க்க

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா... மேலும் பார்க்க