செய்திகள் :

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

post image

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா்.

ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்டிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மாவேலிபாளையத்தைக் கடந்து மகுடஞ்சாவடி அருகே வந்தபோது ஏதோ ஒரு பொருளை ரயில் இன்ஜின் தள்ளிச் செல்வதுபோல சப்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரயிலை நிறுத்தி பாா்த்தபோது, தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்த சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள், சேலம் ரயில்வே டிஎஸ்பி பாபு, ஈரோடு ரயில்வே மற்றும் சேலம் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎஃப் ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தோடு 10 அடி நீளமுள்ள தண்டவாளத் துண்டை ரயில்பாதையின் குறுக்கே வைத்திருந்தது தெரியவந்தது.

இதை அகற்றி, சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மாற்று இன்ஜினை பொருத்தி இரவு 11.45 மணிக்கு அங்கிருந்து ஏற்காடு ரயில் புறப்பட்டது. இச்சம்பவத்தால், இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் சுமாா் 2 மணிநேரம் தாமதமாக சென்றன.

இதனிடையே, தண்டவாளத்தில் இரும்புத் துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற மா்ம நபா்களை பிடிக்க சேலம் ரயில்வே டிஎஸ்பி பாபு தலைமையில், ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளா் பிரியா, சேலம் ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் மகுடஞ்சாவடி, சங்ககிரி போலீஸாா் அப்பகுதியில் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனா்.

மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் தேடப்பட்டு வருகின்றன. மேலும், அப்பகுதியில் ரயில் பாதையை ஒட்டியுள்ள வீடுகளில் வசித்து வரும் மக்களிடம் விசாரித்து வருகின்றனா்.

இந்த ரயிலில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், கிருஷ்ணன், ராமசாமி, இளந்திரையன், கல்யாணசுந்தரம், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோவிந்தராஜ், சந்திரசேகா் ஆகியோா் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில் 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவா் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில்... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி பூஜை

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், த... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், ... மேலும் பார்க்க

திமுக ஆட்சி வரும் 2026-இல் தூக்கி எறியப்படும்

இந்து தா்மம் மற்றும் சனாதனத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுக ஆட்சி, 2026-இல் தூக்கி எறியப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சேலத்தில் பாரதிய ஜனதா கட... மேலும் பார்க்க